புகையிலை வரி அதிகரிப்பு குறித்து பரிசீலிக்கப்படும்! - அன்வார்
- Shan Siva
- 07 Aug, 2025
புத்ராஜெயா, ஆக 7: புகையிலை வரியை அதிகரிக்கும் திட்டத்தை அரசாங்கம்
பரிசீலித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதாரம்
மற்றும் நிதி சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன், குறிப்பாக புகையிலை வரி உயர்வுகளுக்கு
நீண்டகாலமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் ஒத்துப்போகிறது என்று நிதியமைச்சராகவும்
இருக்கும் அன்வார் கூறினார்.
மலேசியாவின்
புகையிலை வரி தற்போது சில்லறை விலைகளில் 58.6% ஆக உள்ளது.
அண்மையில் செப்டம்பர்
2014 இல் அதிகரிக்கப்பட்ட விகிதத்தை அவ்வப்போது சரிசெய்தல் அல்லது மறுமதிப்பீடு
செய்வதற்கான முறையான வழிமுறை நாட்டில் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தாம் புகைபிடிப்பதில்லை, ஆனால் புகைபிடித்தல் எதிர்ப்பு பிரச்சாரங்களை முழுமையாக
ஆதரிக்கிறேன் என்று கூறினார்.
பட்ஜெட் 2026-ல்
அரசாங்கம் வரியை திருத்த முடியுமா என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு
கூறினார்.
கடந்த வாரம்,
13வது மலேசியா திட்டத்தை அறிவிக்கும் போது,
அரசாங்கம் தனது "சுகாதார சார்பு" வரியானது
சர்க்கரைப் பொருட்களுக்கு அப்பால் புகையிலை, வேப்ஸ் மற்றும் மதுபானங்களையும் உள்ளடக்கும் என்று அன்வார்
கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



