விரைவில் இந்திய ராணுவங்களில் ரோபோ ராணுவ வீரர்கள்!

- Muthu Kumar
- 14 May, 2025
போர்க்காலங்களில் வீரர்களின் உயிர் இழப்பை தடுக்க ரோபோ வீரர்களை தயாரிக்க டிஆர்டிஓ தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர மாநிலம் புனைவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பொறியியல் பிரிவு தலைவர் டலோலி போர்க்களம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் போது வீரர்களின் உயிரிழப்பை தடுக்க ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மாதிரி ரோபோக்களை தயார் செய்து கடினமான மலைப்பகுதிகளில் எளிதாக ஏறிச் செல்லும்படியும் நாம் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று செயல்பட ரோபோக்களில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும் போர்க்களத்தில் முன்னேறி செல்வது,கன்னி வெடிகள் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்வது, ஆபத்தான ரசாயனங்களை கையாளுவது, ஆயுதங்களை இழுத்து வருவது ஆகிய கடினமான பணிகளை ரோபோக்கள் மூலம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *