சமரசம் இல்லை! - HRD Corp முறைகேடு குறித்து மனிதவள அமைச்சர் கருத்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 5: எச்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்தில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை பொது கணக்குக் குழு கண்டுபிடித்ததையடுத்து, அதன் அறிக்கைகள் மலேசிய  லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம்  சமர்ப்பிக்கப்படும் என்று
இன்று வெளியிட்ட அறிக்கையில், மனிதவளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்

எம்ஏசிசிக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகளைத் தயாரிக்குமாறு அமைச்சி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாவுட் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷாஹுல் தாவூத் ஆகியோருக்குத் தாம் அறிவுறுத்தியதாகக் கூறினார்.

நேற்று (ஜூலை 4) நாடாளுமன்றத்தில் தணிக்கையாளர்  மற்றும் பொது கணக்குக் குழு வழங்கிய அறிக்கைகளை அமைச்சு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. தணிக்கை செயல்முறை 2019 முதல் 2023 வரை HRD Corp இன் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார். சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளில் அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களில், அமைச்சு மற்றும் அதன் ஏஜென்சிகள் முழுவதும் நல்ல நிர்வாகம் மற்றும் திறமையான செயல்முறைகளை உறுதி செய்வதற்காக ஒரு மறு-பொறியியல் செயல்முறையை தொடங்கியுள்ளது என்று சிம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *