மருத்துவர்களுக்கும் குடும்பம் இருக்கு! - பிரதமர் அலுவலகத்தின் முன் திரண்ட சுகாதாரத்துறையினர்

- Shan Siva
- 06 May, 2025
புத்ராஜெயா, மே 6: சுகாதாரத் துறையுடன் தொடர்பில்லாத ஒரு சட்டத்தின்
கீழ் மருந்து விலைகளை கட்டாயமாகக் காட்சிப்படுத்துவதை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொது
மருத்துவர்கள் (GPs) பிரதமர் அலுவலகம்
முன்பு திரண்டு தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
சுகாதாரப்
பணியாளர்கள் குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள், நியாயமற்ற
கொள்கைகள் தற்போதைய மற்றும் எதிர்கால மருத்துவர்களை ஒதுக்கி வைக்கின்றன மற்றும் மருத்துவர்களுக்கும்
குடும்பங்கள் உள்ளன" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
காலை 10.30 மணியளவில் ஒரு குறிப்பாணையைச் சமர்ப்பிக்க
பத்து பிரதிநிதிகள் கட்டிடத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தை மலேசிய மருத்துவ சங்கத்தின் (MMA) தனியார் பொது மருத்துவ பயிற்சியாளர்கள் பிரிவு ஏற்பாடு செய்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *