மோடி ஒரு சோதனைக் குழாய் குழந்தை - நடிகர் பிரகாஷ் ராஜ்!

top-news
FREE WEBSITE AD

சினிமாவில் தனது தனித்துவமான அசாத்திய நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ்

இவரது நடிப்பின் மூலம் காண்போரை மிரளவைக்கும் வித்தை தெரிந்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். சினிமாவில் மட்டும் கொள்ளகைகளை பேசுவதோடு நிறுத்திவிடாமல், அதனை தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைபிடித்து வருபவர்.

சமுதாயத்தில் நடக்கும் அவலங்களுக்கும், அநீதிகளுக்கும் தயங்காமல் குரல் கொடுத்து வருகிறார், எந்த கட்சியிலும் இவர் இணையவில்லை என்றாலும் தனக்கான அரசியலை இவர் பேச தவறியதில்லை. இந்த நிலையில், சென்னையில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய பிரகாஷ் ராஜ், தான் அரசியல் பேசி வருதற்கு முக்கியமான காரணம் என்ன என்பது குறித்து புரியும் வகையில் எளிமையான விளக்கத்தை கொடுத்தார். அவர் பேசுகையில், "ஒரு கட்சி சார்ந்து இருப்பது தனக்கு பிடிக்காத விஷயம் என்றும், ஆனால் இன்று இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காரணம், நான் போராடும் கொள்ளகைக்காக போராடும் நீங்களும் உங்கள் கட்சியும் என்னுடைய தோழர்கள் என்று திருமாவளவனை நோக்கி கூறினார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நடந்த அவலங்கள் குறித்து தான் பேசி வருவதாக குறிப்பிட்ட பிரகாஷ் ராஜ், தாம் தெய்வக் குழந்தை என பிரதமர் பேசியிருந்த நிலையில் அவரை மறைமுகமாக மன்னர் என விமர்சித்தார், மோடி ஒரு சோதனைக் குழாய் குழந்தை என்றும் குறிப்பிட்டார்.

தனக்கு அரசியலில் நீண்ட அனுபவம் இல்லை என்று பேசிய பிரகாஷ் ராஜ், ஒரு கலைஞனும், சாதாரண குடிமகனும் எப்போதும் எதிர்க்கட்சியாக செயல்படவேண்டும் என்று தெரிவித்தார். பிரகாஷின் ராஜின் பேச்சுக்கு அரங்கில் கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *