கடவுள் விரும்பினால், பெரிக்காத்தான் நேஷனல் அடுத்த அரசாங்கத்தை வழிநடத்தும்!
- Shan Siva
- 12 Sep, 2025
அலோர் ஸ்டார். செப் 12: அடுத்த பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் குறித்த பரபரப்புக்குக் காரணம், தற்போதைய நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதுதான் என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
மக்கள் இப்போது புதிய தலைவர்களைத் தேடுவதாக துவான் இப்ராஹிம் கூறினார்.
கடவுள் விரும்பினால்,
பெரிகாத்தான் நேஷனல் அடுத்த அரசாங்கத்தை வழிநடத்தும் என்று அவர் இன்று பாஸ்
இளைஞர் பிரிவுக் கூட்டத்தில் கூறினார்.
அடுத்த பிரதமர் யார்,
பாஸ் தேர்வு யார் என்று பொதுமக்கள் கட்சியிடம் கேட்டுக்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் ஏன் எங்களிடம் கேட்கிறார்கள் தெரியுமா? தற்போதைய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மீதான நம்பிக்கையை அவர்கள்
இழந்துவிட்டதால் தான் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



