சீன நாட்டவருக்கு குடியுரிமையா?! - அமைச்சர் விளக்கம்
- Shan Siva
- 13 May, 2026
கோலாலம்பூர், மே 13: சீன நாட்டவர்களின் குடியுரிமை விண்ணப்பங்களைத் தன்னிச்சையாக அங்கீகரிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார். மேலும், அவை "அவதூறு" என்றும் அவர் விவரித்துள்ளார்.
X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், தவறான கதைகளால் மக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், நம்பகமான ஆதாரங்கள் மூலம் உண்மைகளை எப்போதும் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்துறை அமைச்சராக தனது பதவிக்காலம் முழுவதும், இந்த உண்மைகளை ஆதாரத் தரவுகளுடன், நாடாளுமன்றத்திலும் ஊடக சந்திப்புகளின் போதும் பலமுறை விளக்கியுள்ளேன்.
ஒவ்வொரு விண்ணப்பமும் கூட்டாட்சி அரசியலமைப்பு, சட்டம் மற்றும் கடுமையான பாதுகாப்புச் சரிபார்ப்புக்கு உட்பட்டது என்று அவர் கூறினார். மேலும், குடியுரிமை விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் செயல்முறை எந்தவொரு கட்சியின் அரசியல் நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



