ஜொகூர் - 3 பகுதிகளில் திடீர் துர்நாற்றம்! - பொதுமக்கள் அவதி!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர், செப்டம்பர் 3: ஜொகூரில் தாமான் டாயா, மவுண்ட் ஆஸ்டின் மற்றும் தாமான் இஸ்திமேவா  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள்  இன்று அதிகாலையில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர்.

 அதிகாலை 1.30 மணியளவில் குடியிருப்பாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்ததாகவும், 20 நிமிடங்களுக்குள் 19 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்படதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், துர்நாற்றத்திற்கான  காரணம், ஆபத்து தன்மை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அதற்கான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துர்நாற்றம் அருகிலுள்ள ஆற்றில் இருந்து வந்ததா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *