ஜொகூர் ரசாயன துர்நாற்றம் - பள்ளிகள் மூடப்படுமா? - கல்வி அமைச்சு விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

குளுவாங், செப் 5: ஜொகூர் பாருவில் ரசாயன துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பல பள்ளிகளின் நிலைமையை கல்வி அமைச்சு (MOE) தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் உள்ளதா என்பது குறித்து சுகாதார அமைச்சு (MOH) மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து அமைச்சு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை பெறும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.
பள்ளி நிர்வாகிகள் கல்வி அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், குறிப்பாக மாசு பிரச்சினைகளை கையாளும் போது இது அவசியம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *