கோல நெருஸ் - இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் மூவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலா திரெங்கானு, ஜூலை 12: இங்கு அருகே உள்ள பத்து ராகிட், கோலா நெருஸ் என்ற இடத்தில் நேற்று இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

இச்சம்பவத்தில் 23 வயது முஹம்மது இக்வான் அகமது இஸேஹாம் , அவரது மனைவி 18 வயது  நூர் மிமி அலியா முகமது ஷுக்ரி மற்றும்  46 வயது ஜைனி அம்பாக் ஆகியோர் மாண்டதாக  கோல திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில், செத்தியூவிலிருந்து கோலா திரெங்கானுவுக்குச் சென்று கொண்டிருந்த முஹம்மது இக்வான் ஓட்டிச் சென்ற புரோட்டான் வீரா மற்றும் ஜைனி இருந்த எதிர்த் திசையில் பயணித்த நிசான் நவரா ஆகிய இரண்டு வாகனங்கள் மோதியதில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

ஜைனியின் கணவரான 58 வயது  ரஸ்தி யாகோப்  காயம் காரணமாக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முஹம்மது இக்வானின் கார் கட்டுப்பாட்டை இழந்து ரஸ்தி ஓட்டிச் சென்ற கார் மீது மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நூர் மிமி அலியா மற்றும் ஜைனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், முஹம்மது இக்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் அஸ்லி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *