GISBH விவகாரத்தில் காவல் துறை லஞ்சமா? தேசிய போலீஸ் படைத் தலைவர் மறுப்பு!

top-news
FREE WEBSITE AD

குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் குற்றச் செயல்களை மூத்த காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேசிய  போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் மறுத்துள்ளார்.

பல மூத்த போலீஸ் அதிகாரிகள் அந்நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறுவதாகவும், அந்நிறுவனத்தை பாதுகாக்க முயல்வதாகவும் சில டிக் டாக் பதிவுகள் வெளியானதை அடுத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டுகள் தவறானவை
என்று குறிப்பிட்ட அவர், போலி TikTok கணக்குகளில் இது போன்ற தகவல்களைப் பரப்பும் பொறுப்பற்ற தரப்பினரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாகக்  கூறினார்.

புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழுவும்  சமூக ஊடகங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக ரஸாருதீன் நினைவூட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *