விஜயலெட்சுமி குடும்பத்தினர் நாடு திரும்பியதை போலீஸ் உறுதிப்படுத்தியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப்டம்பர் 2: ஜலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வில் பலியான 48 வயது விஜயலெட்சுமியின் குடும்பத்தினர் தங்கள் நாடு திரும்பியதை காவல்துறை உறுதிப்படுத்தியது.

விஜயலட்சுமியின் கணவரும் மகனும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இந்தியா கிளம்பியதாக  Dang Wangi மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் ACP Sulizme Affendy Sulaiman தெரிவித்தார்.

முன்னதாக, குடிநுழைவுத்துறை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களான கணவர், மகன் மற்றும் இரண்டு உறவினர்களின் விசாவை நீட்டித்ததாக பெர்னாமா தெரிவித்தது. அதே நேரத்தில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமும் தேடுதல் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தேவைகளுக்கு உதவியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *