நூர் ஃபரா கர்தினி கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

உலு சிலாங்கூர், ஜூலை 26: பாமாயில் தோட்டத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட நூர் ஃபரா கர்தினி அப்துல்லாவைக் கொலை செய்ததாக இன்று கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஜூலை 10 மற்றும் ஜூலை 15 க்கு இடையில் உலு பெர்னாமின் கம்போங் ஸ்ரீ கெலேடாங்கில் உள்ள பாமாயில் தோட்டத்தில் (யுபிஎஸ்ஐ) பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி நூர் ஃபரா கர்தினியைக் கொன்றதாக 26 வயதான லான்ஸ் கார்போரல் முஹம்மது அலிஃப் மொஞ்சனி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் தண்டனையின் போது குறைந்தபட்சம் 12 பிரம்பு அடிக்கு வகை செய்கிறது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *