சுயநினைவை இழந்த நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா!

top-news
FREE WEBSITE AD

பாலிவுட் நடிகர் கோவிந்தா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு, தனது வீட்டில் இருந்த போது நடிகர் கோவிந்தா திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனைகள் செய்து தேவையான சிகிச்சை அளித்தனர்.

கோவிந்தாவின் வழக்கறிஞரும் நெருங்கிய நண்பருமான லலித் பிந்தால் கூறுகையில், "கோவிந்தா கடந்த சில நாட்களாக சோர்வாக இருந்தார். நேற்று மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை நிலைமையைத் தாண்டி சீராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

"கோவிந்தாவின் அனைத்து முக்கிய பரிசோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளன. நரம்பியல் நிபுணரின் மேலதிக ஆய்வு முடிவுகள் வரைக்கும் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்" என மருத்துவர்கள் கூறினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *