லாரி மோதி பெண் பலி! கார் டயரை மாற்றும்போது நிகழ்ந்த சோகம்

top-news
FREE WEBSITE AD

நவ: 20,

நேற்று காலை சிரம்பான் செனாவாங் தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 260.6 ல், தனது காரின் டயரை மாற்றும் போது லாரி மோதியதில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.காலை 9.20 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், தண்ணீர் வடிகட்டி நிறுவனத்தில் பணிபுரிந்த 31 வயதான பாதிக்கப்பட்ட பெண், செனாவாங்கில் உள்ள தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் புரோட்டான் X50 ஓட்டுநரான சம்பந்தப்பட்ட பெண், காடோங்கிலிருந்து செனாவாங் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார் என்பது ஆரம்பக்கட்ட  விசாரணையில் கண்டறியப்பட்டதாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அசாஹர் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *