பெட்ரோல் - டீசல் விலை குறித்து தவறான தகவல் பரப்பிய பெண்ணுக்கு RM4000 அபராதம்
- Shan Siva
- 19 May, 2026
புத்ராஜெயா, மே 18: சமூக ஊடகங்கள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறித்த தவறான தகவல்களைப் பரப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பெண்ணுக்கு, சிப்பாங் அமர்வு நீதிமன்றம் நேற்று RM4,000 அபராதம் விதித்தது.
மார்ச் 31 அன்று, ஒரு பதிவை நூர் இர்சலினா ஓமர் குமார் பதிவேற்றியதாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) கூறியது.
அந்தப் பதிவில் எரிபொருள் விலை உயர்வு குறித்த தவறான தகவல்கள் இருந்தன. இந்தச் செயல் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, வாழ்க்கைச் செலவு குறித்த கவலையைத் தூண்டியதுஎன்று அது ஒரு அறிக்கையில் கூறியது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், இர்சலினா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாக MCMC கூறியது. அவர் அந்தத் தொகையைச் செலுத்திவிட்டார்.
இந்த வழக்கு, 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (சட்டம் 588) பிரிவு 233(1)(a)-இன் கீழ் நடத்தப்பட்டது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தகவல்களைப் பகிரும் முன் அவற்றின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்த்துக் கொள்ளுமாறும், இணையதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறும் அது பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



