காரில் பெண்ணின் சடலம்! காவல் அதிகாரியைத் தாக்கிச் சென்ற ஆடவன்! 6 பேர் கைது!
- Muthu Kumar
- 08 Sep, 2025
கோலாலம்பூர், செப் 9: நேற்று பேராக்கின்
சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்தியதோடு, அவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற ஒருவரின் காரில், ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான
விசாரணைக்கு உதவ, ஆறு பேரை
போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது
செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண், முக்கிய சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் என்று பேராக்
காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
இந்த வழக்கில்
அவர்களின் பங்கைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்திற்கான காரணம்
மற்றும் சந்தேக நபருக்கும் இறந்தவருக்கும் இடையிலான உறவு குறித்தும் விசாரித்து
வருகிறோம் என்று நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.
62 வயதான
பாதிக்கப்பட்ட பெண் டொயோட்டா அவன்சாவின் பின் இருக்கையில், தலை ஒரு பிளாஸ்டிக் பையில் மூடப்பட்ட நிலையில்
காணப்பட்டார். மூச்சுத் திணறலால் இறந்ததாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
போலீசார் அந்தப்
பெண்ணை அடையாளம் கண்டுள்ளதாக நூர் ஹிசாம் கூறினார்.
சிம்பாங்
பூலாயில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் செல்லப்பட்ட ஒரு காரை போலீசார்
பின்தொடர்ந்த பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஓட்டுநர் தனது
வாகனத்தை நிறுத்த மறுத்து, அதற்கு பதிலாக
வேகமாக ஓட்டி, பின்னர் ஒரு
எண்ணெய் பனை தோட்டத்திற்கு அருகில் நிறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



