கோம்பாக் பள்ளி நச்சுணவு விவகாரம்... 15 பேரிடம் போலீஸ் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 18: கடந்த ஜூன் 8ஆம் தேதி உணவில் விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுவன் மற்றும் இரண்டு வயது சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக உணவு வழங்குபவர் உட்பட 15 பேரிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில் உதவ அழைக்கப்பட்ட அனைவரும் குடும்ப உறுப்பினர்கள், நோயியல் நிபுணர், உணவு வழங்குபவர் மற்றும் சப்ளையர் என்று கோம்பாக் காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் நசீர் தெரிவித்தார்.

இதுவரை, இது தொடர்பாக 15 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட பிறரின் அறிக்கைகள் இன்று பதிவு செய்யப்படும் என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *