விமானத்தில் வெடிகுண்டு! மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய இரு சீன நாட்டவர் கைது
- Shan Siva
- 23 Sep, 2025
கோலாலம்பூர், செப் 23: தவாவிலிருந்து கோத்த கினாபாலு செல்லும் விமானத்தின்
இருக்கைகளில் தாங்கள் கோரியது போல மாற்றம் செய்யத் தவறியதால், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக
மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய இரண்டு சீன சுற்றுலாப் பயணிகள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல்
3 மணியளவில் விமான ஊழியர் ஒருவர் அளித்த காவல்துறை புகாரைத் தொடர்ந்து இந்த கைது
நடந்ததாக தாவாவ் காவல்துறைத் தலைவர் ஜாஸ்மின் ஹுசின் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, 28 வயது பெண்
மற்றும் 29 வயது ஆண் ஆகிய இருவரும் செப்டம்பர் 27 வரை நான்கு நாட்கள் காவலில்
வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குற்றவியல்
மிரட்டலுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 மற்றும் பிரிவு 505(b) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச்
சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இந்த ஜோடி
செம்போர்னாவில் விடுமுறையில் இருந்து திரும்பி வந்ததாகவும், இன்று கோத்த கினாபாலுவுக்கு பறக்க
திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



