வா நண்பனே வா! – அன்வாரை கட்டியணைத்து வரவேற்ற மோடி!

top-news
FREE WEBSITE AD

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் 3 நாள்பயணமாக இந்தியாவிற்குப் பயணம்  மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்  சந்தித்தார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அன்வாரை பார்த்த  மோடி, அன்வார் தனது அருகே வருவதற்கு சில அடி தூரம் முன்பே தனது இரு கைகளையும் நீட்டியவாறு அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரை நோக்கிச் சென்று  கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள அன்வார்,  பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளை இந்திய பிரதமர் மோடியுடன் நடத்தினார். மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த  அன்வார், இரு நாட்டு உறவுகள் குறித்தும் பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *