வீடுகள்தான் முதல் பள்ளி! மாணவர் குற்றம் அதிகரித்திருப்பது வருத்தமளிக்கிறது! – மாமன்னர்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், நவ 19: மாணவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைய கடுமையான குற்றச் சம்பவங்கள் குறித்து மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கவலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அவர்களின் ஒழுக்கம், மதம் மற்றும் குணநலன் வளர்ச்சி குறித்து கேள்விகளை எழுப்புகின்றன என்று அவர் கூறினார்.

மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருக்கும் சுல்தான் இப்ராஹிம், இந்த வழக்குகள் நாட்டின் கல்வி நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறினார்.

 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடங்களில் மனிதநேயம், ஒழுக்கம், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் தொடர்புடைய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்த வேண்டும் என்று மன்னர் வலியுறுத்தினார்.

இந்த அணுகுமுறையின் மூலம், ஒருவருக்கொருவர் மதிக்கும் ஒரு ஒழுக்கமான தலைமுறையை நாம் வளர்க்க முடியும் என்று சுல்தான் இப்ராஹிம் இன்று  UiTM இன் 103வது பட்டமளிப்பு விழாவில் கூறினார்.

இதுபோன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது வகுப்பறைக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகப் பொறுப்பு என்றும், கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சி அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

வீடுகள்தான் அனைவருக்கும் முதல் பள்ளி... சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு மதிப்புகள், ஒழுக்கம் மற்றும் சமூகத்திற்கான பொறுப்புணர்வு கற்பிக்கப்படும் இடம் அதுதான் என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாட்டில் மாணவர்களை வழிநடத்த பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களையும் அவர் நினைவூட்டினார்.

சமாணவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அணுகுவதை கட்டுப்படுத்துவதற்கு எதிராகவும் அவர் தமது கருத்தை முன்வைத்தார்.  இது டிஜிட்டல் கற்றல் பொருட்களை அணுகுவதைத் தடுக்கலாம் என்று  கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *