நாடகம் பார்க்க வாருங்கள்! - அன்வார் அழைப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 24: கோலாலம்பூர் துன் சையத் நசீர் கலாச்சார மையமான DBP யில் புதன்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘ஹாஜி முராத்’ நாடக அரங்கேற்றத்தைக் காண பொதுமக்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் குறிப்பிடத்தக்க நாவல் மற்றும் இறுதிப் படைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம், போரும் இரக்கமற்ற சக்தியும் பல தீய மற்றும் துரோகக் கதாபாத்திரங்களை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதை வலியுறுத்துவதாக பிரதமர் கூறினார்.

இது ஜிஹாத் மற்றும் தேசியப் போராட்டத்தின் கருப்பொருளை ஆராய்கிறது.

ஹாஜி முராத்தின் கதாபாத்திரம் இரண்டு கொடுங்கோல் சக்திகளுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு தனிமனிதன் மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றுவதைப் பற்றியது என்று அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *