நாளை மாமன்னரின் முடிசூட்டு விழா! நேசத்திற்குரிய நினைவாக நெஞ்சில் நிற்கும்! – Fahmi Fadzil

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 19: மலேசியாவின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராஹிமின் பதவியேற்பு விழா நாளை இஸ்தானா நெகாராவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் சிறப்புக் குழுவின் தலைவரான ஃபஹ்மி,  இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக அதற்கான ஒத்திகைகள் நடத்தப்படுவதாக கூறினார்.

 

நாளைய விழா மலேசியர்களுக்கு ஒரு நேசத்துக்குரிய நினைவாக மட்டுமல்ல, தேசிய பெருமைக்கான ஆதாரமாகவும் இருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும்,  இது நம் நாட்டின் தூணாக இருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *