நாட்டின் முன்னேற்றத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுங்கள்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

பாகான் செராய், ஆகஸ்ட் 30: அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்புதல் செயல்முறை மற்றும் மக்கள் நலனுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் போது சாத்தியமான முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ளும் முக்கிய காரணிகளில் ஒன்று தேவையான உள்கட்டமைப்புதான் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடாமல், நாட்டின் முன்னேற்றத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு துல்லியமாக மதிப்பிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மியான்மர், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடலாம் என்று தாம் அமைச்சரவைக்கு முன்மொழிந்தாகவும், இதன் மூலம் நாம் திறமையானவர்களா இல்லையா என்பதை மதிப்பீடு செய்யலாம் என்றும் அவர் விளக்கினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *