கல்வியில் விரிவான சீர்திருத்தம் தேவை! – அன்வார்
- Shan Siva
- 03 Oct, 2025
கோலாலம்பூர். அக் 3: மலேசியாவின் கல்வி அமைப்பில் டிஜிட்டல் முன்னேற்றத்தையும் கலாச்சாரம், மத மதிப்புகளையும் சமநிலைப்படுத்தும் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
கல்வி என்பது
ஆன்மாவை விடுவிக்கவும், அடையாளத்தை உருவாக்கவும், நாட்டின் சிந்தனையை வடிவமைக்கவும் வேண்டும் என்று அவர் வர்ணித்தார்.
இன்று தேசிய
கல்வி மன்றக் (MPN) கூட்டத்தில் Malaysia Education
Blueprint 2026-2035, Higher Education Blueprint 2026-2035, பொதுக் கல்வி பாடங்கள் போன்றவை குறித்து
விவாதித்ததாக பிரதமர் கூறினார்.
கல்வி
சீர்திருத்தம் என்பது தனியாகச் செய்ய முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், அதில் புதுமை, செயற்கை நுண்ணறிவு (AI), சமூகம், மதம், மதிப்புகள் அனைத்தும் இணைந்து இயங்க வேண்டும் என்று விளக்கினார்.
அறிவியல்,
தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM), AI, பஹாசா மலாய், ஆங்கிலம் மற்றும் வரலாற்றில் தேர்ச்சி, அத்துடன் மதப் பள்ளிகளின் பங்கு போன்ற
அழுத்தமான பிரச்சினைகளை கவுன்சில் செம்மைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் தேசிய அடையாளத்தில் வேரூன்றிய கல்விக்கான
எதிர்காலத்தை உருவாக்க, பல்கலைக்கழகங்களுக்கும்
மலேசிய அறிவியல் அகாடமிக்கும் (ASM) இடையேயான இணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



