ரோன் 95 உதவித் தொகை! எந்தத் திட்டமும் இல்லை!

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஜூன் 2: ரோன் 95 ரக பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை தொடர்பாக எந்தத் திட்டமும் இல்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அத்தகைய திட்டம் குறித்த ஆய்வு முன்னர் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், செயல்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கூறினார்.

 

டீசல், மின்சாரம் மற்றும் கோழிகளுக்குத்தான்  இலக்கிடப்பட்ட உதவித் தொகையை அரசாங்கம் கொண்டு வந்தது.. ஆனால், ரோன் 95 ரக பெட்ரோலுக்கு இதுவரை  எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற, பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் ஃபாட்லி ஷாரி எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சருமான அன்ப்வார் இவ்வாறு பதிலளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *