டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் மலேசியாவைப் பாதிக்கவில்லை! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 13: மலேசியாவின் பொருளாதாரக்  குறியீடுகள் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் தவறுகள் காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்துவிட்டதாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கூற்றுகளை பிரதமர் நிராகரித்தார்.

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற பிராந்திய சகாக்களுடன் ஒப்பிடும்போது, ​​ மலேசியா மட்டும் மிகக் குறைந்த நிதி வெளியேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக பிரதமர் கூறினார்.

2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஊக்கமளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்ட அன்வார், 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் முதலீடுகள் 10.7% உயர்ந்துள்ளன என்று விளக்கினார். இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, என்று அவர் கூறினார்.  அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உடனான முதலீட்டு உறுதிமொழிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது  என்று இன்று  வியாழக்கிழமை  மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது அன்வார் இவ்வாறு கூறினார்.

Nomura, JP Morgan மற்றும் HSBC போன்ற மதிப்பீட்டு நிறுவனங்கள் மலேசிய பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான மதிப்பீடுகளை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

அக்டோபரில் பங்குச் சந்தை மற்ற பிராந்திய பங்குச் சந்தைகளைப் போலவே சரிந்ததையும் அன்வார் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் தொடர்ந்து பெரிய லாபத்தைப் பதிவு செய்ததாக, முக்கிய வங்கிகள் பதிவு செய்த லாபங்களை வாசித்துக் கொண்டே அவர் கூறினார்.

பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சமீபத்தில் நாட்டில் தங்கள் பங்குகளை விற்று வருவதற்கான காரணங்கள் குறித்து பெரிக்காத்தான் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர்  வான் அகமது ஃபைசல் வான் அகமது கமல் கேட்ட கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *