சுங்கை பெட்டானியில் பொது இடத்தில் தாயைத் தாக்கிய மகன் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 17: கெடா, சுங்கை பெட்டானியில் உள்ள ஒரு ஜகாத் அலுவலகத்திற்கு வெளியே, தனது தாய் என நம்பப்படும் ஒரு வயதான பெண்ணை நேற்று தாக்கியதாகக் கூறப்படும் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணொளி ஒன்றில், அந்த நபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து, கூர்மையான ஆயுதம் என்று கூறப்படும் ஒன்றை ஏந்தியபடி, அந்த வயதான பெண்ணின் தலை முக்காட்டைப் பிடித்து இழுத்து, வாகனத்தில் ஏறுமாறு கட்டளையிடுவது பதிவாகியிருந்தது.

30 வயதுகளில் உள்ள அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டதாகவும், இந்தச் சம்பவம் குறித்து மேலும் சாட்சிகளைத் தேடி வருவதாகவும்கோலா மூடா காவல் துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் கூறினார்.

தற்போதைக்கு எந்த வழக்குப் பொருளையும் காவல்துறை கைப்பற்றவில்லை என்றும், குற்றவியல் மிரட்டல் பிரிவின் கீழ் தண்டனைச் சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் இந்தச் சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஹன்யான் கூறினார்.

முன்னதாக, கோலா மூடா ஜகாத் அதிகாரி அஹ்மத் முஸ்தகிம் ஜைனுல் அபிதின், தாயும் மகனும் தங்கள் வீட்டைப் பழுதுபார்க்கும் பணிகளுக்கான விலைப்புள்ளியைச் சமர்ப்பிக்க அலுவலகத்திற்கு வந்திருந்ததை உறுதிப்படுத்தினார்.

50 வயதுகளில் உள்ள அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படுவதாகவும், அவர் தனது ஒரே மகனுடனும் அவரது குடும்பத்தினருடனும் வசித்து வருவதாகவும் முஸ்தகிம் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *