தென் சீனக் கடல் பிரச்னை! - வெளிப்புற சக்திகள் தேவையில்லை! - அன்வார்
- Shan Siva
- 27 Oct, 2025
கோலாலம்பூர், அக் 27: தென் சீனக் கடல் தொடர்பான பிரச்சினைகள் பிராந்திய
கட்டமைப்பிற்குள் மற்றும் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து, வெளிப்புற சக்திகளின் தலையீடு அல்லது திணிப்பு இல்லாமல்
தீர்க்கப்பட வேண்டும் என்று ஆசியான் விரும்புவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.
இன்று 20வது
கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கிய அன்வார், வெளிப்புற சக்திகள் இந்த செயல்முறையை ஆணையிட முயன்றால்
விஷயங்கள் மிகவும் சிக்கலானதாகவும் பதட்டமாகவும் மாறும் என்று கூறினார்.
நிச்சயமாக,
விரிவான விவாதங்கள் நடந்துள்ளன என்று குறிப்பிட்ட
அவர், இந்த நடத்தை விதிகளை உருவாக்க அனைத்து
தரப்பினரும் ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
ஆனால் எல்லா
பிரச்சினைகளிலும் இருப்பது போலவே, ஆசியானுக்குள் தீர்க்கப்பட
வேண்டும் என்றும், ஆசியான்
பிராந்தியத்தில் உள்ள கூட்டாளிகளுடன் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தாங்கள் விரும்புவதாக
அன்வார் குறிப்பிட்டார்.
இது வெளிப்புற சக்திகளால் திணிக்கப்பட்டு கட்டளையிடப்படுவதாகக்
காணப்படும் தருணத்தில், விஷயங்கள்
மிகவும் சிக்கலானதாகவும் பதட்டமாகவும் மாறும் என்று அன்வார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



