தொலைநோக்குப் பார்வை இல்லாத காங்கிரஸ் கட்சி  - நிர்மலா சீதாராமன்!

top-news
FREE WEBSITE AD

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஆங்கில செய்தி ஊடகத்திற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் மத்திய அரசு குறை கூறுவது மட்டும் அல்லாமல், இந்திய மக்களின் சாதனைகளை குறைத்து மதிப்பிடும் வேலையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகிறது.காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். தற்போது மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. பா.ஜ.க அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல் குறை கூறி வருகிறார். அவர் புள்ளிவிவரங்களுடன் விமர்சிக்கவில்லை. நாங்கள் சிறப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.

எதிர்க்கட்சியினரால் திறம்பட போராட முடிந்தால், எங்களை எதிர்த்துப் போராடுங்கள். எங்களது வெற்றியை கண்டு, எப்படி குறை கூறுவது என எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *