அம்னோவைத் தடை செய்ய சதி செய்தேனா? மகாதீர் மறுப்பு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 21: மகாதீர் அம்னோவைத்  தடை செய்ய முயன்றதாக அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறிய குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் மகாதீர் மறுத்துள்ளார்.

ஜாஹிட்டின் கூற்று முற்றிலும் பொய்யானது என்று மகாதீரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அப்போது அம்னோவைத் தடை செய்ய மகாதீர் எண்ணியிருந்தால், உள்துறை அமைச்சருக்கு அவர் அறிவுறுத்தியிருப்பார். ஆனால் அவர் பிரதமராக இருந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அம்னோ தொடர்ந்து நீடித்தது.

அம்னோ இனி மலாய்க்காரர்களுக்காகவும் அதன் ஸ்தாபகக் கொள்கைகளுக்காகவும் நிற்காது, அதன் தலைவர்கள் ஊழலுடன் தொடர்புடையவர்கள் என்பதால் கட்சியைக் கலைக்குமாறு ஜாஹிட்டிடம் மகாதீர் கூறியதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

அம்னோவைக் கலைக்கும் முடிவு ஜாஹிட் மற்றும் கட்சியின் தலைமையைச் சேர்ந்தது என்றும், கட்சி அதன் பாதையில் இருந்து விலகிவிட்டதாகவும், இனி அம்னோ என்று அழைக்கப்படுவதற்கு தகுதியில்லை என்றும் அது கூறியது.

ஜாஹிட் மீது நீதிமன்றத்தில் 47 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அக்கட்சி தடை செய்யப்படவில்லை என்பதற்கு தற்போதும் அக்கட்சி இருப்பதே சான்றாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அம்னோவின் பதிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க அப்போதைய உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் தயாராக இருப்பதாக தற்போதைய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனக்குத் தெரிவித்ததாக ஜாஹிட் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *