தாயாரை அரவணைக்க மறக்காதீர்கள் அன்வாரின் அன்னையர் தின வாழ்த்து செய்தி!

top-news
FREE WEBSITE AD

அன்னையர் தினத்தன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்,  அனைத்து பெண்களுக்கும், குறிப்பாக அவரது மறைந்த  தாயாருக்கும்   மற்றும் அவரது மனைவிக்கும் மனப்பூர்வமான அன்னையர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.
 
தன்னுடைய முகநூல் பதிவில், அன்வார் தனது தியாகங்கள், கடின உழைப்பு இவற்றிற்கு எல்லாம் காரணம் எனது தாயார் மற்றும் எனது மனைவி இவர்களே காரணம் என்று குறிப்பிட்டு அன்னையர் தினத்தன்று  தனது அன்பால் நன்றி தெரிவித்தார்.

நம்முடைய ஒவ்வொரு தாயாரின் கருணையை நினைவில் வைத்து, அவர்கள் இந்த உலகில் இருக்கும் வரை ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை அரவணைத்து  கைகளை முத்தமிடுங்கள் என்று தன்னுடைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தனது மறைந்த தாய் மற்றும் அன்பு மனைவியை தழுவியது போல் இரண்டு புகைப்படங்களையும் தன்னுடைய பதிவில் பகிர்ந்துள்ளார்.

  ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகளவில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *