உணர்ச்சிவசப்படாதீர்கள்! - சீனர்களுக்கு ஜொகூர் முதல்வர் வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 24: உணர்ச்சிகரமான முடிவுகளை எடுப்பதையும்  வரும் சனிக்கிழமை நடைபெறும் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதையும் தவிர்க்குமாறு மகோத்தாவில் உள்ள சீன வாக்காளர்களை ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி வலியுறுத்தியுள்ளார்.

குளுவாங்கில் நடந்த சீன வர்த்தக சங்கம் மற்றும் சமூகத்தின் கூட்டத்தில் பேசிய அவர், சமூக ஊடகங்களில் உள்ள உணர்ச்சிக் குவியல்களால் பாதிக்கப்படாமல் பகுத்தறிவுடன் சிந்திக்குமாறு வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

பாரிசான் நேஷனல் வேட்பாளரை சீன வாக்காளர்கள் புறக்கணிப்பதாகப் பேசுவதைக் கேட்கும்போது தாம் வருத்தமுற்றதாகத் தெரிவித்த அவர்,  இது முதலீட்டாளர்களுக்கு வரவேற்கத்தக்க விஷயம் அல்ல என்று கூறினார்.

ஜொகூர் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை நிரூபித்து, அதன் அனைத்து பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும், குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று Onn Hafiz கூறினார். அனைவரும் இணைந்து ஜொகூர் பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்புகிறோம்

எனவே,ஜொகூர் நலனுக்காக வாக்காளர்கள் தங்கள் உணர்ச்சிகளை ஒதுக்கி வைக்குமாறு ஒன் ஹபீஸ் வலியுறுத்தினார்.

கடந்த சனிக்கிழமை, குளுவாங் எம்பி வோங் ஷு குய், மக்கோத்தா தொகுதியில் உள்ள சீன வாக்காளர்களை செப்டம்பர் 28 இடைத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று வலியுறுத்தும் நச்சுக் கடிதங்கள் விநியோகிக்கப்படுவதாகக் கூறியதை அடுத்து, அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *