பல மாநிலங்களில் தொடர் மழை நீடிக்கும்! - மெட் மலேசியா

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 28: திரெங்கானு, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையமான மெட்மலேசிய அபாய நிலை தொடர் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. சனிக்கிழமை வரை கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக சேனல்கள் மூலம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சமீபத்திய தகவல்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ள மேலாண்மையை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு முயற்சிகளை வலுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்கவும், உதவி மற்றும் பேரிடர் மீட்பு முயற்சிகள் இரண்டையும் உள்ளடக்கிய RM57 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

லா நினா நிகழ்வால்  வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீட்பு நடவடிக்கைக்குத் தேவையான பொருள்கள் மற்றும் தளவாடங்கள் முன்கூட்டியே திரட்டப்பட்டுள்ளன என்று  பணிக்குழு தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *