குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்காதீர்கள்... சரியான பாதையில் செல்லுங்கள்! - பெரிக்காத்தானுக்கு ஜாஹிட் அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

குவா மூசாங், ஆகஸ்ட் 9: நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒற்றுமை கூட்டணி, அரசு  எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாரிசான் நேஷனல்தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி பெரிக்காத்தான் கூட்டணியை வலியுறுத்தியுள்ளார்.

 பெரிக்காத்தான் நேஷனல் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்காமல் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று துணைப் பிரதமருமான அவர் கூறினார்.

அரசு எந்திரத்தை நாங்கள் தவறாக பயன்படுத்துகிறோம் என்று மட்டும் குற்றஞ்சாட்டாதீர்கள்.

கிளந்தான் அரசாங்கம்தான் அவ்வாறு செய்கிறார்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாக, ரெனோ பாருவில் உள்ள மக்களைச் சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாரிசான் வேட்பாளருக்குப் பிரச்சாரம் செய்யும் போது பிரச்சாரத்திற்காக அரசு எந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று கிளந்தான் மந்திரி பெசார் அண்மையில் கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜாஹிட் இவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *