குடியுரிமை பிரச்சனையை அரசியல் ஆக்காதீர்கள்! உள்துறை அமைச்சர் வேண்டுகோள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 15: மாநில சட்டசபை சேவை மையங்கள் நடத்தும் குடியுரிமை விளக்க நிகழ்ச்சிகள் எதையும் அரசியலாக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமை தொடர்பான சிக்கல்கள் புதிதல்ல, சட்டமன்ற உறுப்பினராக தாம் பணியாற்றிய காலத்திலும் ஏற்பட்டதாக சைபுதீன் தெரிவித்தார்.
பல மாநில சட்டசபை சேவை மையங்கள், அவை அரசாங்கமாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி,  தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் அல்லது திருமணம் செய்த பெற்றோர்கள் உட்பட குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பான கோரிக்கைகளை மக்களிடமிருந்து பெறுவார்கள்.
எனவே இதை அரசியலாக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]