தனுஷ் ,திரிஷாவையும் விட்டு வைக்காத பாடகி சுசித்ராவின் சர்ச்சை பேச்சு!

top-news
FREE WEBSITE AD


இணைய உலகில் பேசுபொருளாகி இருக்கிறார் பின்னணிப் பாடகி சுசித்ரா. தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து, தனது முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர், ஐஸ்வர்யாவும், தனுஷூம் திருமணத்திற்குப் பின்னரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்தது என்று அடுத்தடுத்து பரபரப்புகளுக்கு  பஞ்சமில்லாமல் பேட்டியளித்து திரையுலகை அதிர வைத்திருக்கிறார் சுசித்ரா.

இந்த வரிசையில் நடிகை த்ரிஷாவையும் வம்பிழுக்கத் தவறவில்லை. சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் த்ரிஷா குறித்தும் பேசியிருக்கிறார். கடந்த 2016ல் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் பல பிரபலங்களில் அந்தரங்கமான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பானது.



த்ரிஷா, அக்‌ஷராஹாசன் எனப் பல பிரபலங்கள் இதில் சிக்கினர். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுசித்ராவின் திருமணம் வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. இப்போது கொடுத்திருக்கும் பேட்டியில் இந்த சுச்சி லீக்ஸ் வெளியிட்டதே தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக்குமாரும் நடிகர் தனுஷூம் சேர்ந்துதான் எனக் கூறியிருக்கிறார்.

மேலும், தன்னுடைய பெர்சனல் புகைப்படங்களை நடிகை த்ரிஷாவே எடுத்துக் கொடுத்தார் என்ற ரீதியில் பேசியிருந்தார் சுசித்ரா. இந்த விஷயத்திற்கு த்ரிஷா ரியாக்ட் செய்துள்ளார். தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் மறைமுகமாக, 'நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது' என்று அப்செட் ஆகி இருக்கும் எமோஜியைப் பகிர்ந்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *