சர்ச்சை வீடியோ விவகாரம்... முகைதீன் போலீஸில் வாக்குமூலம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21: நெங்கிரி சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு செராமாவில் 3ஆர் விவகாரம் தொடர்பாகப் பேசியதாக முன்னாள் பிரதமர்  டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் மீது புகார்கள் பெறப்பட்ட நிலையில், இன்று அவரின் வாக்குமூலத்தை போலிசார் பதிவு செய்தனர்.
இன்று காலை கோலாலம்பூரில் உள்ள மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டிடத்திற்கு வந்திருந்த அவரிடம், போலிசார்  வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் யூனுஸ், கெராக்கான் கட்சியின் தலைவர் டோமினிக் லாவ்,  மலேசிய இந்திய மக்கள் கட்சி தலைவர் புனிதன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
குறிப்பிட்ட அந்த செராமாவில் நாட்டின் 16 வது மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தஃபா குறித்து விமர்சித்தமைக்காக அவர் இந்தச் சர்ச்சையில் சிக்கினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *