கவலை வேண்டாம்... இன்னும் வலுவாகத் திரும்புவீர்கள்! - சோங் வெய்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 15: கடந்த மாதம் நடந்த கொடூரமான ஆசிட் தாக்குதலுக்குப் பிறகு, தேசிய கால்பந்து வீரர் பைசல் ஹலீம் முன்பை விட வலுவாக மீண்டு வருவார் என்று பேட்மிண்டன் ஜாம்பவான் லீ சோங் வெய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், முன்னாள் உலகின் நம்பர் 1 வீரரான சோங் வெய், சிலாங்கூர் எஃப்சி வீரர் பைசலை தற்போது பின்னடைவு இருந்தாலும், நேர்மறையாக இருக்குமாறு வலியுறுத்தினார், மேலும் "எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஃபைசல் தனது கால்பந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்ததாகவும், தனது பாதுகாப்புக்கு பயந்து தனது லாபகரமான சம்பளத்தை கைவிடத் தயாராக இருப்பதாகவும் நேற்று தெரிவித்தார்.

இதனை அடுத்து நீங்கள் இன்னும் வலுவாகத் திரும்புவீர்கள் என்று சோங் வெய் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *