கஷ்டப்படும் தம்பதியருக்கு உணவுப் பொருள் உதவி! கல்வியமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர நாராயணன் வழங்கினார்!

top-news
FREE WEBSITE AD


நிபோங் தெபால், ஜூலை 19: வேலையின்றி நிலையான வருமானம் இல்லாமல் இருக்கும் 21 வயது தம்பதியரின் சூழ்நிலையை அறிந்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை நேரில் சென்று கொடுத்து உதவியுள்ளார் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியகராஜ் சங்கரநாராயணன்.

 

ஜாவி ஜமாலியாவில் வசிக்கும் பிந்தி அப்துல்லா மூலம், ஸ்ரீதரன் a/l யோகேஸ்வரன்  மற்றும் அவரது மனைவி தமிழந்தி a/p விஜயன் இருவரின் நிலையைத் தாம் அறிந்ததாகவும், 2 வயது குழந்தையுடன் சிரமத்தை எதிர்கொள்வதாக அறிந்து உடனே உதவ முன்வந்ததாகவும் அவர் கூறினார்.

 

ஜாவியில் உள்ள பிளாட் புக்கிட் பஞ்சூரில் உள்ள அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களின் நிலையை நேரில் கண்டதாகவும்

அதன்படி, அவர்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்கும் வகையில் உணவுப் பொருள்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதுபோன்ற உதவிகள் தேவைப்படும் Nibong Tebal இல் உள்ள மக்கள் தாராளமாக தன்னை அழைக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Nibong Tebal Sejahtera க்காக, மக்கள் பிரச்சனைகளில் அக்கறையும் உணர்வும் கொண்ட நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒய்.பி.ஃபாத்லினா சிடேக்கின் ஆசியுடன் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *