முதலில் உங்கள் மாநில பிரச்னையைப் பாருங்கள்... - பினாங்கு முதல்வர் சனூசிக்கு பதிலடி

top-news
FREE WEBSITE AD

பினாங்கு, ஜூன் 10: பினாங்கிற்குத் தண்ணீர் வழங்கத் தாம் தயார் என்று கெடா மந்திரி பெசார் முஹமட் சனூசி முகமட் நூர் தெரிவித்திருந்த நிலையில், கெட மந்திரி பெசார் சனூசி முதலில் தனது மாநிலத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வழிகாணட்டும் என்று பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயோ தெரிவித்துள்ளார்.

 

பினாங்கு மாநிலத்தில் சில பகுதிகளில் தண்ணீர் பிரச்சனைகள் உள்ளன என்பதைத் தாங்கள் அறிவோம் என்றும், இருப்பினும்  அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட சாவ் கோன் இயோ

இப்பிரச்சனையை இனப் பிரச்சனையோடு தொடர்புப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.


பினாங்கில் தண்ணீர் இல்லை என்று கூறும் சனுசி முதலில் தனது மாநிலத்தின் நலனைக்  கருத்தில் கொள்ள வேண்டும்.  தானா பெசாரை லங்காவியுடன் இணைக்கும்

கடலுக்கு அடியிலான நீர்க்குழாய் கசிவு பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதை சனூசி நினைவில்கொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *