நஜிப் வீட்டுக் காவல் கூடுதல் உத்தரவு குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம்! - முன்னாள் பேரரசர் உத்தரவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 28முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என்று பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா இன்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்றங்களின் எல்லைக்குள் இருப்பதாக முன்னாள் பேரரசருமான அவர்ப் கூறினார். மேலும் அனைத்து தரப்பினரும் இந்த செயல்முறையை மதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட  கூடுதல் உத்தரவுக்கான ஆணையானது பொறுப்பான மற்றும் நம்பகமான நபர்களின் கைகளில் உள்ளது. எனவே, அனைத்து தரப்பினரும் நிறுவப்பட்ட சட்டங்கள் மற்றும் செயல்முறைகளை மதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழப்பம் அல்லது தேவையற்ற விவாதங்களை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எழும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதில் நேர்மை, நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளை அனைவரும் நிலைநிறுத்த வேண்டும் என்றும் தாம் கேட்டுக்கொள்வதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *