கால்பந்தாட்ட வீரர்கள் தாக்குதல்... ஊகங்கள் வேண்டாம்... கவல்துறை எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD


கால்பந்தாட்ட வீரர்களுக்கு எதிரான அண்மைய வன்முறை சம்பவங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருஇன் ஹுசேன் கூறினார்.

மேலும் ஆசிட் வீச்சு நடந்த இடத்தில் கிடைத்த கைரேகைகளை போலீசார் எடுத்துள்ளதாகவும்,

தற்போதைக்கு ஒரு சந்தேக நபரை காவலில் வைத்துள்ளதாஜவும் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறினார்.

மேலும், அரண்மனையுடன் தாக்குதல்களை தொடர்புபடுத்துவது உட்பட விசாரணைகளை பாதிக்கக்கூடிய ஊகங்களை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் அவர் எச்சரித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்னும் (தெரெங்கானுவின்) அக்யார் ரஷீத், (சிலாங்கூர்) ஃபைசல் ஹலீம் மற்றும் (ஜோகூர்) சஃபிக் ரஹீம் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் குறித்து விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

உண்மையான நோக்கம் கண்டறியப்பட்டதாக சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற தரப்பினரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், அவை எல்லாம் ஊகங்கள் மற்றும் பொய்கள் என்று கூறினார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *