ஒழுக்க குறைபாடு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை! - பிரதமர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD


பாங்கி, ஜூலை 13: ஒழுக்கக் குறைபாடுகள் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கால அடிப்படையிலான பதவி உயர்வுக்கு தகுதி பெற மாட்டார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

கால அடிப்படையிலான பதவி உயர்வு கொள்கைகளை தாம் ஏற்றுக்கொண்டாலும், பணி ஒழுங்காகச் செய்யாத ஆசிரியர்களுக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்

ஒழுக்கம் பலவீனமாக இருந்தால்,  வகுப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

இயல்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பதவி உயர்வின் கட்டமைப்பு மற்றும் கொள்கைகளை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் கவனக்குறைவாக அல்லது ஒழுக்கம் இல்லாத ஆசிரியர்கள் அதிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று  இன்று, தேசிய ஆசிரியர் தொழில் சங்கத்தின் (NUTP) பொன்விழா விழாவில் பிரதமர் இதனை தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *