இன்றுமுதல் அரசு நிகழ்வுகளில் வழங்கப்படும் பானங்களுக்கு சர்க்கரை அளவு குறைக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 1: இன்று முதல் அரசாங்க நிகழ்வுகளில் வழங்கப்படும் பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவு 50  விழுக்காடாகக் குறைக்கப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் தேசிய நோயுற்ற தன்மை கணக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மலேசியர்களிடையே நீரிழிவு நோயின் அதிகரிப்பு இருப்பதாகவும், மக்கள் தொகையில் 15.5 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் அரசாங்கத்தின் முன்முயற்சிகளில் ஒன்றாக, அரசாங்க நிகழ்வுகள், கூட்டங்கள் உட்பட, பானங்களில் சர்க்கரையை 50 சதவீதம் குறைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், சர்க்கரை சேர்க்கப்படாமலும் பானங்கள் வழங்கப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி பாட்சில் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *