எந்த நிராகரிப்பும் இல்லை! - தேர்தல் பிரச்சாரக் கண்காணிப்பு நியாயமாகவே இருந்தது! - சைபுடின்

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 5:: சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் ஒரு அனுமதி விண்ணப்பம் கூட நிராகரிக்கப்படவில்லை என்று  உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இரு தரப்பினரின் 153 விண்ணப்பங்களும் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்டதாக  அவர் கூறினார். எதுவும் மறுக்கப்படவில்லை, அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டன என்றார் அவர்.

காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைய கண்காணிப்பாளர்களால் தேர்தல் பிரச்சாரக் கண்காணிப்பு நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருந்ததாக சைபுதீன் கூறினார்.

பிரச்சார நிகழ்வுகளுக்கு அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாரபட்சம் அல்லது அதிகப்படியான தலையீடு இன்றி காவல்துறை பாதுகாப்பை உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதுவரைக்கும் நான்கு புகார்கள் கிடைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர்,  பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த பிரச்சாரம் தற்போது கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தார்

தேர்தல் நாள் வரை மொத்தமாக 835 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சுங்கை பக்காப் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை காவல்துறை மிக அதிகமாக ஆராய்கிறது என்ற பாஸ் தலைமையின் கூற்றுக்களை அவர் நிராகரித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *