சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மேலும் கூடுதல் பாதுகாப்பு!

top-news
FREE WEBSITE AD

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி இரவு மும்பையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அவரது படுகொலையை தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானுக்கு மும்பை புறநகரில் உள்ள பன்வெலில் பண்ணை வீடு இருக்கிறது. இப்பண்ணை வீட்டிற்கு போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். வழக்கமாக சல்மான் கான் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பண்ணை வீட்டிற்கு வரும்போது போலீஸார் பாதுகாப்பு கொடுப்பது வழக்கம்.

இப்போது துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பண்ணை வீட்டிற்கு எந்நேரமும் பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்துள்ளதாக நவிமும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். பண்ணை வீட்டிற்கு வெளியில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகப்படும் வாகனங்களை எளிதில் மடக்கி பிடிக்கும் வகையில் சல்மான் கான் வீட்டிற்கு செல்லும் சாலையில் பல இடங்களில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருக்கின்றனர்.

ஏற்கெனவே சல்மான் கானுக்கு மும்பை போலீஸார் ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். தற்போது அதனை மேலும் அதிகரித்துள்ளனர். அதன்படி சல்மான் கான் வாகனம் செல்லும் போது அதோடு போலீஸார் பாதுகாப்பு வாகனம் ஒன்றும் செல்லும். அதில் அனைத்து வகையான துப்பாக்கிகளையும் கையாளக்கூடிய போலீஸ்காரர் ஒருவரும் இருப்பார். அதோடு சல்மான் கான் எங்கு சென்றாலும் அப்பகுதி போலீஸார் உஷார்படுத்தப்பட்டு போலீஸ் கண்காணிப்பு வழங்கப்படும். அதோடு சல்மான் கான் பிக்பாஸ் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும்போது அங்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

555'"

aiPxvpay

@@mfd3r

aiPxvpay

(select 198766*667891)

aiPxvpay

(select 198766*667891 from DUAL)

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555