நஞ்சுணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு... நாசி லெமாக்தான் காரணமா?!

top-news
FREE WEBSITE AD


கோத்தா கினாபாலு: புலாவ் கயாவில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட அன்று  காலையில் நாசி லெமாக் சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (ஜூலை 22) காலை 9.50 மணிக்கு குழந்தைகள் அந்த உணவை சாப்பிட்டதை புலனாய்வாளர்கள் அறிந்துகொண்டதாக சபா சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் அசிட்ஸ் சன்னா கூறினார்.

எவ்வாறாயினும், மாணவர்களின் நடமாட்டம் மற்றும் உணவுப் பொருட்கள் குறித்த விவரங்கள் இன்னும் விசாரணையில் இருப்பதாக அவர் கூறினார்.

விசாரணைக்காக உணவு, பானங்கள் மற்றும் பள்ளி சுற்றுப்புறங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், நச்சுகள், பூச்சி விரட்டிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் இரசாயனங்கள், கன உலோகங்கள், காளான்கள் மற்றும் கடல் உணவுகள் போன்ற போன்றவற்றால் உணவு விஷம் ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

உணவு விஷத்தின் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினால், உடனடியாக சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு நாங்கள் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *