பஹாகியா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான உதவி!
- Shan Siva
- 28 Apr, 2026
சண்டக்கான், ஏப் 28: கம்போங் பஹாகியா தீ விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு, தினசரி உணவு, பண உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள்
உள்ளிட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரிங்கிட் மதிப்பிலான உதவியை மகளிர், குடும்பம் மற்றும் சமூக நல மேம்பாட்டு
அமைச்சகம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகம் மற்றும் அதன்
முகமைகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த உதவியில், தினசரி உணவுப் பொருட்களுக்காகச் செலவிடப்பட்ட சுமார் 900,000 ரிங்கிட் அடங்கும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக நல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறினார்.
சபா மாநில பேரிடர்
மேலாண்மைக் குழுவின் நிதிக்கு தேசிய சுகாதார அறக்கட்டளை (Yayasan Kebajikan
Negara) 200,000 ரிங்கிட் ரொக்கமாக
வழங்கியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு 205,000 ரிங்கிட் மதிப்புள்ள
அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அதன் பெருநிறுவனக் கூட்டாளியான சைம் டார்பி (Sime
Darby) சுகாதாரப் பெட்டிகள்,
மெத்தைகள் மற்றும் தலையணைகளையும்
வழங்கியுள்ளது.
சைம் டார்பி உள்ளிட்ட பிற
நன்கொடையாளர்களின் பங்களிப்புகளைத் தவிர, தங்கள் தரப்பிலிருந்து கிடைத்த மொத்தத் தொகை சுமார் RM505,000 ஆகும் என்று அவர் கூறினார். இன்று ஸ்ரீ ஹராப்பான்
நல இல்லத்தில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது
அவர் இவ்வாறு கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



