சிங்கப்பூர் குடியுரிமைக்காக 6000-க்கும் மேற்பட்டோர் மலேசியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர்! - உள்துறை அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: இந்த ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக 6,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 6,060 பேர் அவ்வாறு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூருக்காக 16,930 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்ததாக அவர் கூறினார். இது 2023 இல் 11,500 ஆக இருந்ததை விட அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2022 இல், இந்த எண்ணிக்கை 5,623 ஆக இருந்தது என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *